தேர்வு எழுதி விட்டு கல்லூரி மாணவி காதலனுடன் மாயம்..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் அன்சர் பாட்சா. இவரது மகள் ஷிப்னா (வயது 18) இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தேர்வு எழுத கல்லூரிக்கு வந்தவர் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த மாணவிக்கு தினேஷ் என்பருடன் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. காதலனுடன் எங்கோ மாயமாகி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இந்த நிலையில் மாயமான மாணவி பெற்றோர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளாராம் .அதில் நான் மீண்டும் வீட்டுக்கு வர மாட்டேன் .என்னை தேட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..