அதிமுகவை யாராலும் அசைக்க கூட முடியாது – செயல்வீரர்கள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நகரச் செயலாளர் ம.மயில் கணேசன் தலைமையில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது அனைவரையும் வரவேற்ற நிலையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னால் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போது 31 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் அதிகப்படியான வளர்ச்சி பணிகளை செய்து சாதனை படைத்துள்ளதாகவும், அதிமுகவை யாராலும் அசைக்கக்கூட முடியாது என்றும் அதிலும் வால்பாறை பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளையும் எடப்பாடி யார் தலைமையிலான அரசு மட்டும் தான் செய்துள்ளது, திமுக அரசு எதுவும் செய்யவில்லை, மேலும் ஒரு தேர்தலில் தோல்வி வந்தால் அடுத்து வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறும் கட்சி அதிமுக இது சரித்திரம், ஆகவே 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள வால்பாறை பகுதியில் அதிகப்படியான வாக்குகளை பெறவேண்டும் வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி யார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று கூறி சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார் பின்பு அதிமுகவின் உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்பித்தார் முன்னதாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரண்டு குளிர்சாதனப்பெட்டி களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் தலைமை மருத்துவர்களிடம் வழங்கினார் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவின்நாயகர் முன்னால் அமைச்சருக்கு அதிமுக நகரகழகத்தின் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது . இவ்விழாவில் மாவட்ட, நகர கழக, சார்பு அணி, ஐடி விங்க், வார்டு கழக, கிளைக் கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..