திருச்சி மலைக்கோட்டையில் அதிமுகவினர் தர்ணா.!!

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள 14 வது வார்டில் பல வருடங்களாக சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் பாதாள சாக்கடை பணி சரிவர நடைபெறாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். மாநகராட்சியை கண்டித்து 14வது மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் .பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் 18ஆம் தேதி சாலையை சீரமைத்து தருவதாகவும் பாதாள சாக்கடை பணிகளை முடித்து தரவும் உறுதி அளித்தனர். இந்த தர்ணா போராட்டத்தால் பாபு ரோடு முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை சமூக முடிவு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்..