திருச்சியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி..!

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் ஆட்டோவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார் இந்தப் பேரணியில் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் இருந்து கோர்ட் எம்ஜிஆர் சிலை வழியாக சென்று அரசு தலைமை மருத்துவமனையை அடைந்தது.