அதிவேகமாக வந்த வேன் மோதி விமானப் படை அதிகாரி பரிதாப பலி..

கேரள மாநிலம் கோட்டையம் பக்கம் உள்ள நெல்லூர் வழிய விடில் பகுதியைச் சேர்ந்தவர் பேபி ஜான் (வயது54) இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்குள்ள விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவர் கோவை -திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் ஐயப்பன் கோவில் அருகில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவர் மீது மோதியது. இதில் பேபிஜான் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக விமானப்படை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் அவர் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ராபின் ஜான் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ( பொறுப்பு) சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக வேன் டிரைவர் ஆரோக்கிய அருள்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.