அல் – உம்மா இயக்க தலைவர் பாஷா மரணம். கோவையில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு.

கோவையில் கடந்த 1998 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புசம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அல்- உம்மா இயக்க தலைவர் எஸ் .ஏ. பாஷா உட்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தனி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எஸ். ஏ. பாஷா, அன்சாரி உட்பட பலருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு 7ஆண்டு என்று சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. கைதாகி தண்டனை பெற்ற எஸ் .ஏ.பாஷா, அன்சாரி உட்பட பலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி எஸ் .ஏ. பாஷா 25 ஆண்டுகள் கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார். அவருக்கு வயது மூப்பு காரணமாக உடலில் சில உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி பரோலில் வெளியே வந்து சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவர் கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வெளியே வந்து வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். அவரது வீட்டில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் ஆஸ்பத் திரிக்கு செல்லும்போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று எஸ்.ஏ. பாஷாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது .உடனே அவர் கோவைபீளமேட்டில்உள்ள தனியார் மருத்து வமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மாலை திடிரென்று உடல்நிலை மேலும் மோச மானது.. சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பாஷா நேற்று மாலை 5-:20 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.. அவருக்கு ரசீதா என்ற மனைவியும், சித்திக் என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இன்று (செவ்வாய்க் கிழமை)  மாலை 4 மணிக்கு கோவை ஆர். எஸ். புரம், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் ஹைதர் அலி பள்ளிவாசல் கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப் படுகிறது. இதற்காக அவருடைய வீட்டிலிருந்து கபர்ஸ்தானுக்கு எஸ். ஏ. பாஷா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுகிறது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பாட்ஷாவின் வீடு மற்றும் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறையில் உள்ள 2 ஆயிரம் போலீசார் மற்றும் வெளியூர்களில் இருந்து பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப் பட்டுள்ளனர் .அவர்கள்ஊர்வலம் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாஷாவின் அல் உம்மா இயக்கம் தடை செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.