திருச்சியில் அனைத்து மத சகோதரர்கள் நடத்திய அன்னதானம்..!

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள அன்னதான மண்டபத்தில் உறையூர் பாண்டமங்கலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்கள் குழு இணைந்து நடத்திய அன்னதான விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சேர்ந்த சுமார் 2000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உறையூர் வெக்காளியம்மன் கோயிலின் 50ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி விழாவை முன்னிட்டு இந்த மாபெரும் அன்னதானம் கோயிலின் எதிரே உள்ள ஓம் சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரளான உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அன்னதானமானது காலை மதியம் இரவு மூன்று வேளையும் அன்னதானம் அளிக்கப்படுகிறது . இந்த அன்னதான நிகழ்வுகளை உறையூர், பாண்டமங்கலம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் குழு சிறப்பாக செய்திருந்தார்கள்.