கோவை அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் திருட்டு..!

கோவை : இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் 16 ஆம்புலன்ஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இதில் ஒரு வேனை டிரைவர் சவுந்திரராஜன் ஓட்டி வந்தார். இவர்நேற்று முன் தினம் இரவில் கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே வேனை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது அந்த ஆம்புலன்சை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.  இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். இது குறித்து ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் கண்ணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார் . சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..