கோவையில் அமெரிக்க வியாபாரி திடீர் மரணம்..

அமெரிக்காவைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 56) இவர் இந்தியாவில் அமெரிக்காவிலும் சாப்ட்வேர் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்காக அடிக்கடி இந்தியா வருவார் .இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து கோவை வந்தார்.கோவை தீத்திபாளையம் நல்லாசிரியர் நகரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி ராணி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.