11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..!

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் மாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை புதர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தச் சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். தொடர்ந்து அவர் இது போன்ற செயல்களில் அந்த சிறுவனிடம் ஈடுபட்டு வந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் சிறுவனின் பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்தை தேடி வருகிறார்..