கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி, சாந்தி மேடு, நேரு நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ( வயது 63) குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கேபிள் வயரைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மனைவி சாவித்திரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை..
