7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 22 ஆண்டு சிறை – போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் அந்தோனி (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று 27.08.2024-ம் தேதி குற்றம்  சுமத்தபட்ட முதியவர் அந்தோனிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000/-* அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த நிலையில் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் கனிமொழ  மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், பாராட்டினார்.