கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி மரணம்..

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இவர் சிறையில் 3 – வது பிளாக்கில் உள்ள ஜன்னலில் துண்டை கட்டி தூக்கில் தொங்கினார்.

இதே போல நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 56) இவர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவருக்கு சிறையில் 8-வது பிளாக்கில் வைத்து வைத்து திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து ஜெயிலர் சரவணகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோவை மத்திய சிறையில் கடந்த 2 நாட்களாக நடந்து வரும் தொடர் சாவு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .