மற்றொரு மாவோயிஸ்ட் தலைவன் மொய்தீன் கைது.!!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, எல்லை பகுதிகளில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவன் சோமன் சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது சொரனூர் அருகே வைத்து போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில்,  அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு மாவோயிஸ்ட் தலைவனான மொய்தீன் என்பவரை எர்ணாகுளம் அருகே பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் செல்லும் போது மொய்தீனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 15 மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நக்சலைட் இயக்கத்தில் சேருபவர்களுக்கு இவர் தான் ஆயுத பயிற்சி அளித்ததாக தெரிய வந்துள்ளது. இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்..