பிரபல கொள்ளையன் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்..!

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம், ஜி கே. எஸ் நகரை சேர்ந்தவர் பட்டீஸ்வரன். இவரது மகன் ரவி என்ற ரவீந்திரன் ( வயது 23) இவரை கோவில்பாளையம் போலீசார் வழியம்பாளையத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரபி என்ற ரவீந்திரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இதுவரை 49 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..