கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….

கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகியோர் மீது கிணத்துக்கடவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளிகளான இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகிய இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.