114 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது – ஆவடி காவல்துறை அதிரடி.!!

ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல் ஆணையாளர்கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 68 பேர் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 15 பேர் போதை பொருட்கள் வழக்கில் தொடர்புடைய கேடிகள் 24 பேர் கள்ளச் சந்தை வழக்குகளில் தொடர்புடைய கேடிகள் 4 பேர் மற்றும் இணையதள குற்ற வழக்குகளில் தொடர்புடைய கேடிகள் 3 பேர் என மொத்தம் இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 114 ரவுடிகள் மீதான பரிந்துரையின்படி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதில் இம்மாதம் குறிப்பாக ஜூலை 2024 மட்டும் ஆவடி காவல் ஆணையரகத்தில் பல்வேறு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 கேடிகள் மீது கு ண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.