திருச்சியில் சீதாராம் யெச்சூரி படத்திற்கு மாலை அணிவித்து அன்பில் மகேஷ் மரியாதை..!

சீதாராம் யெச்சூரியின் திருஉருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவையொட்டி திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திருஉருவப் படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதிக் கழகச் செயலாளர் மோகன் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம் உள்பட பலர் உடன் இருந்தனர்..