காதலியுடன் தகராறு… காதலன் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள பெரியபோது புது காலணியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மகன் பிரவீன் (வயது 24) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பிரவீன் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தந்தை விஜயகுமார் ஆனைமலை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.