காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!!

காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!!

கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். கீர்த்திகா பத்தாம் வகுப்பு படித்து எம்ரால்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தினமும் சதீஷ்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கீர்த்திகாவின் செல்போனை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்திகா கோபித்துக் கொண்டு அருகே உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சதீஷ்குமார் தொலைபேசி மூலம் கீர்த்திகாவை அழைத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் மனைவி வர மறுத்ததால் விரக்தி அடைந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் டாஸ்மார்க் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம், பக்கத்தினர் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.