கோவை மாநகர புதிய போக்குவரத்து துணை கமிஷனராக அசோக் குமார் பொறுப்பேற்பு.!!

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ரோகித் நாதன் ராஜகோபால் .இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் .இதை யடுத்து புதிய போக்குவரத்து துணை கமிஷனராக கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிவகுமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகளும், காவல்துறை அமைச்சு பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவர் கூறியதாவது:- கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விபத்து இல்லாத கோவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் சிறப்பு கருவிகொண்டு பரிசோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பொதுமக்களும் போக்குவரத்து போலீசாருக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்..