பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து கோவை பெண்ணிடம் நூதன மோசடி.!!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன் .இவரது மனைவி இம்மி பியூலா (வயது 45 )இவள்  நேற்று உக்கடம் என்.எச் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எந்திரத்தில் கோளாறு உள்ளது. நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி அவரது கார்டை வாங்கி உள்ளே செலுத்துவது போல மற்றொரு போலி கார்டை மாற்றி பியூலாவுக்கு கொடுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அவரது செல்போனில் ரூ.40 ஆயிரம் எடுத்திருப்பதாக மெசேஜ் வந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பியூலா உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..