கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் – ஒருவர் கைது..!

கோவை சாய்பாபா காலனியில்உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமாத்தாள் (வயது 50) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சேகர் (வயது 36) இவருக்கு ராமாத்தாளின் மகன் கடந்த 2021-ஆண்டு ரூ 3 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை ராமாத்தாள் நேற்று கேட்ட போது சேகர் அவரது சேலையை பிடித்து இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ராமத்தாள் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தார் . இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.