வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி கொலை மிரட்டல் – இளம்பெண் போலீசில் புகார்..!

கோவை உக்கடம்,பழைய மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் முபாரக். அலி அவரது மகன் நஸ்ரின் (வயது 23 ) இவருக்கும் கரும்புக்கடை, சாரமேடு, திப்பு நகரை சேர்ந்த ஹர்ஷத் அகமது (வயது 26) என்பவருக்கும் 2 – 5 – 20 23 அன்று திருமணம் நடந்தது..திருமணத்தின் போது நஸ்ரின் வீட்டில் 10 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் முடிந்த பிறகு கணவர் அர்ஷத் அகமது வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நஸ்ரின் போத்தனூர் திருமறை நகரில் உள்ள தனது மூத்த அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த ஹர்ஷத் அஹமத், அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கழுத்தை பிடித்து நெறித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து நஸ்ரின் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் கணவர் அர்ஷத் அகமது மீது வரதட்சணை கொடுமை கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.