போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி – 2 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை புலியகுளம் ரெட் பீல்டு பகுதியில் பிரதேச ராணுவ படை முகாம் உள்ளது. இங்கு இராணுவத்தில் வேலைக்கு ஆள் சேர்ப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராணுவ வெப்சைட் மூலம் ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதை சரிபார்த்த போது அதில் 2 பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர முயற்சித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் . புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் , கணக்கு முத்து தண்ணீர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த அசோக், கிருஷ்ணகிரி மாவட்டம் செம்பாண்டமுத்தூர், கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.