தாயை மது பாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி – மகன் கைது..!

கோவை மாவட்டம், சோமனூர் செல்வபுரம் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 90))இவரது மகன் வேலாயுதம் ( வயது 53) கைத்தறி நெசவு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாயார் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்வார். இவருக்கு தாயார் கிருஷ்ணவேணி மது குடிக்க கூடாது என்று புத்திமதி வழங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மதுபாட்டினை உடைத்து தாயாரை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தார் .இவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..