சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – போக்சோவில் வாலிபர் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவா ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுமாறு கூறி சிறுமுகை ரோட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏ.டி.எம் . மையத்தில் பணமில்லாததால் தெரிந்த நபரிடம் வாங்கி வரலாம் எனக் கூறி காட்டுப்பகுதி வழியாக அழைத்துச் சென்றார் .அப்போது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி ஓடி பெற்றோரிடம் கூறினார் .அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்..