மனைவியை தாக்கி குழந்தையை பறிக்க முயற்சி – கணவர் மீது வழக்குபதிவு..!

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பூங்கா நகர் சிற்றம்பலம் லே அவுட்டை சேர்ந்தவர் ராஜா ( வயது 39)இவரது மனைவி அனுசியா. இவர்களது மகள் ரிதன்யா.கருத்து வேறுபாடு காரணமாக அனுசுயா கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் ராமநாதபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜா கடந்த 19ஆம் தேதி மீனா குமாரியின் வீட்டுக்குச் சென்று அனுசுயாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் . பின்னர் அவரது கையில் இருந்த குழந்தை இதன்யாவை பறித்தார் .. அப்போது குழந்தை அழுததால் அவரால் முடியவில்லை. பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து அனுஷாவின் தாயார் மீனாக்கு மாரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜா மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.