கோவையில் அதுல்யா சீனியர் கேர் மையம் புதிதாக தொடக்கம்..!

கோவை அருகே மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் அதுல்யா சீனியர் கேர் மையம் என்ற பெயரில் மூத்தகுடி மக்களுக்கான ப்ரீமியம் குடியிருப்பு வளாகம்
புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.இதன் தொடக்க விழா இன்று (30ந்தேதி)காலை நடைபெற்றது
.விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுஅதுல்யா சீனியர் கேர் மையத்தை திறந்து வைத்தார்கள்.
விழாவில்கோவை அதுல்யா சீனியர் கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திக் நாராயணன் .தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறும் போது கூறியதாவது:-
70,000 சதுரஅடி என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கோவையின் இந்த புதிய அதுல்யா சீனியர் கேர் வளாகம், வயது முதிர்ந்த நபர்களுக்கு உயர்தர பராமரிப்பையும், சௌகரியத்தையும் வழங்குவதில் அதுல்யா கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு நேர்த்தியான சாட்சியமாக திகழ்கிறது. கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர். பிரதாப்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த வளாக தொடக்கவிழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்வளாகத்தில் மொத்தத்தில் 100 படுக்கை வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. குடியிருப்பாளர்களுக்கு விசாலமான மற்றும் சௌகரியமான வாழ்விட வசதியை வழங்கும் வகையில் இது ஒவ்வொன்றும் மிக கவனத்தோடும், நேர்த்தியோடும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  நாம் வசிக்கும் அமைவிடம் நம்முடையது என்ற உணர்வையும், அந்தரங்க பாதுகாப்பையும் மற்றும் நம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற சூழலையும் பேணி வளர்க்கும் நோக்கத்தோடு இவ்வளாகத்தில் உள்ள ஒவ்வொரு அமைவிட வசதியும் மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத இரு பிரிவுகள் உட்பட, மொத்தத்தில் ஏறக்குறைய 200 பணியாளர்கள் அடங்கிய குழு, அதுல்யா சீனியர் கேர் வளாகத்தில் செயல்படுகிறது.  இங்கு வசிக்கும் மக்களுக்கு, அதுவும் குறிப்பாக  முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும், கனிவுள்ள தோழமை உணர்வும் கிடைப்பதை சிறப்பான, பயிற்சியளிக்கப்பட்ட இப்பணியாளர்கள் குழு உறுதிசெய்யும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.விழாவில்  தொழில் அதிபர்கள் லீமாரோஸ்மார்ட்டின், சார்லஸ், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்