கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுக இளைஞரணியில் கோவை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளராகவும் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும், இவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் ...

தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கமளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது ; மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அண்ணா பல்லலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 476 பொறியியல் கல்லூரிகளை ...

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் சென்னை கோபாலபுரம் வரை பாதயாத்திரை போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது சென்னை வள்ளுவர் ...

பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை அதிகரிப்பு ஏழை மற்றும் ...

தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள்,அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில நிபதனைகள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 53 ) இவருக்கு திருமணமாகி மனைவி. மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் .இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாய், தந்தை, வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமி ...

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து ...

கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் இவரது மகள் சஜிதா (வயது 15) வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ...

கோவையை அடுத்த ஆலந்தூரை பக்கம் உள்ள பூலுவ பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இங்கு வசிப்பவர் விஜயகுமார (வயது 29 ) கூலி தொழிலாளி.அதே முகாமில் வசிக்கும் தினேஷ் என்ற அண்டா ( வயது 22) இவர்கள் இருவரும் உறவினர்கள்.நேற்று,தினேஷ் பூலுப்பட்டி சந்தைப்பேட்டை அருகே குடிபோதையில் நின்று கொண்டு இருந்தார் அப்போது விஜயகுமாரின் மகள்கள் பிரின்சி, ...

கோவை மதுக்கரை அருகே உள்ள குமிட்டி பதி,வழுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 47) தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று ஒத்த கால் மண்டபம்- வேலாந்தவளம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று ...