கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு அக் கல்லூரியின் சேர்மன் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற பெயரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனான டாஸ்வின் அதே ...

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் ...

ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் அவருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ...

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது ...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ...

நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ...

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ...

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 13ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் மாணவர்களை சேர்க்கும் பணியும் தொடங்கியது. தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் ...

கா்நாடகத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மஜத தோல்வி அடைந்தது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2-ஆவது முறையாக கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோந்தெடுக்கப்பட்ட பாஜகவின் நிா்மலா சீதாராமன், கே.சி.ராமமூா்த்தி, காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ...

கோவை: கோவையில் அரசுப் பொருள் காட்சி சனிக்கிழமை (ஜூன் 11) தொடங்க உள்ளது. இதையடுத்து ஏற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கோவை சிறைச் சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஆண்டுதோறும் பொருள்காட்சி நடைபெறுவது வழக்கம். கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருள் காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான பொருள் காட்சி ...