தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக காலதாமதமாக 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது இந்த சலுகையை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.அதே சமயம்,தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை ...

இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்து உலக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை நார்வே செஸ் போட்டியில் அபார வெற்றி பெற்றார். கிளாசிக்கல் பிரிவு 5ம் சுற்றில் அர்மகெடான் செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை 50 நகர்த்தல்களில் தோற்கடித்தார் ஆனந்த். இதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார். கிளாசிக்கல் பிரிவுக்கு முன்பு பிளிட்ஸில் நார்வேயின் சூப்பர் ...

தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் (கள்ளக்காதலன் என்றும் சொல்லப்படுகிறது) சையது அலி, புரோக்கர் வேலை செய்த மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் ...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விஷயத்தில் நாம் பெரும்பான்மையாக இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதால் பெருமளவிலான அந்நிய செலாவணி ...

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கான பரிசோதனை எடுக்கப்பட்டு இருக்கிறது. சிறுமிக்கு உடல் முழுக்க எரிச்சல் மற்றும் தழும்புகள் தோன்றியதை அடுத்து குரங்கு அம்மை அறிகுறியாக இருக்கலாம் என கருதி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிறுமிக்கு வேறு எந்த ...

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கோவில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் – பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச ...

பொது இடங்களில் புகைப் பிடிப்போர் மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்து, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பின் நிர்வாகி சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது: “தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை, காவல்துறை, ...

ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பத்து நிமிடத்தில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர். வெறும் பத்து நிமிடங்களில் மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று ஸ்டார்ட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிமகன்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாதாரணமாக உணவு டெலிவரி செய்வதற்கே 30 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் ...

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ...

சர்வதேச அளவில் சுற்றுலாவில் கவனம் ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாக துருக்கி உள்ளது. இந்த நிலையில், துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே (turkiye) என மாற்றம் செய்யக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது. ...