தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் ஏழை மாணவர்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது என திருப்பி அனுப்பியுள்ளார். இது மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் ...

கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை செடிகளும் அதிகளவில் உள்ளது. வனத்தில் வசிக்கக் கூடிய விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனால் எப்போது யானை ...

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&-ந் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் கோவை மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 நகராட்சிகளில் 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ...

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அக்கட்சியினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். அவர்களும் மனுதாக்கல் செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் கோவை மாநகராட்சிக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்களை ...