சென்னை: நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும். அதே சமயம் மாநில அரசுகள் ஏற்கனவே வேறு வேறு விதிகளை வைத்து இருப்பதால் அவர்கள் இந்த கீழ்க்கண்ட விதிகளை அமல் செய்ய ...

பெங்களூர்: சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைக் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் அவர்கள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் இதுதான் மிகப் பெரியதாகும். இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய ...

அமெரிக்க தேசிய நுண்ணறிவுப் பிரிவு இயக்குநர் துளசி கப்பார்ட் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்திருக்கிறார். இந்தப் பயணத்தில் அவர் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்த இருக்கிறார். குறிப்பாக, திங்கட்கிழமை நடைபெறும் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மாநாட்டில் துளசி கப்பார்டு பங்கேற்கிறார். இந்த மாநாடு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் ...

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு மாவட்ட செயலாளரும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ள முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சமீப காலமாக மோதல் எழுந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது இருவருக்கும் வேட்பாளர் அறிவிப்பில் மோதல் ...

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில், அந்நாடு யேமனில் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வந்தது. இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் ...

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி வீராங்கனையான ...

டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், ...

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் அறிவித்த நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை இன்று பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில் சென்னை சாலிகிராமில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தின் ...

தமிழ்நாடு அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளி அன்று தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இன்று முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் ...