குடிபோதையில் 12 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு..

கோவை அருகே உள்ள வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 60) இவர் காந்திபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகிறது மனைவியும் 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.நேற்று இவர் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்துக்குசென்றார், அங்குள்ளஜோதிகார்டனில்புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் மேலே ஏறிப் பார்த்தார். குடிபோதையில் இருந்ததால் 12 அடி உயரத்தில் இருந்துதவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி மரகதம் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்கு பதிவு செய்துவிசாரணைநடத்தி வருகிறார்.