கோவை ஏப்25
கோவை துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம்.பாளையம், சங்கர் லேஅவுட்டைசேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 47) ஆட்டோ டிரைவர், குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுஎஸ்.எம். பாளையத்தில் உள்ளஉள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார்.அங்கு திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது மனைவி உஷா துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.