ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மக்கள் குறை கேட்கும் முகாம் – திருவிழா கூட்டம் போல திரண்ட மக்கள்..!

ஆவடி : சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு குற்ற சம்பவங்கலில் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இக் குறைதீர்க்கும் முகாமில் கூடுதல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களை நேரடியாக சந்தித்து குறை களை கேட்டு அறிந்து 66 மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தனர். இந்த முகாமில் கூடுதல் துணை ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும்.