கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு விருது – மாநில துணை தலைவர் வாழ்த்து..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஊர் மக்கள் சார்பாக கீழக்கரை மக்கள் பொது தளம் மற்றும் நகர் SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து டிரைவர் அப்துல் பஹத் என்பவருக்கு விருது வழங்கபட்டது..

விருது பெற்றதை தொடர்ந்து மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது நேரில் சென்று டிரைவர் அப்துல் பஹத் என்பவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் கீழக்கரை நகர் தலைவர் ஆம்புலன்ஸ் கமிட்டியின் தலைவர் ஜின் அபுதாஹீர், துணை தலைவர் ஜலீல் , செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் செயல் வீரர்கள் ஹமீது பாக்கர், சுலைமான்,சித்திக், முர்சலீன், ஹலில் ஆகியோர் உடனிருந்தனர்.