சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி..!

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் தடுக்கும் பொருட்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மனிதனுக்கு அழகு கல்வி மண்ணுக்கு அழகு மரம் போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் கூற மாணவிகள் திரும்பக் கூறி ஊர்வலமாக வந்தனர் . முன்னதாக பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா துவங்கி வைத்தார். பேரணியில் சாரணிய இயக்க மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள், சாரணிய ஒருங்கிணைப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..