பி. ஏ.பி. வாய்க்காலில் கார் கவிழ்ந்து வாலிபர் பரிதாப பலி..

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மின் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 32 )இவர் நேற்று அந்தியூர் – பண்ணை கிணறு ரோட்டில் கார் ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கார் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கோகுல்நாத் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது தந்தை சிவராஜ் கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.