பி.இ. பட்டதாரி விஷம் குடித்து தற்கொலை..

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் மணிகண்டன் ( வயது 31) பி.இ. பட்டதாரி .இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை சிங்கநல்லூர், உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர்லே -அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.கடந்த 2 நாட்களாக இவர் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை . இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் உரிமையாளர் துர்நாற்றம் வீசுவதை அறிந்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது மணிகண்டன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது பிணத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..இவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.