வழிப்பறி கொள்ளையர்கள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!

கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதாக இடிகரை பகுதியை சேர்ந்த மருது மகன் குமார் என்ற நல்ல குமார் (வயது 20)மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கபாண்டியன் என்ற சுபாஷ் ( வயது 20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர்கள் தொடர்வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளிகளான குமார் என்ற நல்ல குமார், தங்கபாண்டியன் என்ற சுபாஷ் ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்..