கல்லால் தாக்கி பனியன் தொழிலாளி கொலை – குடிபோதையில் வெறிச்செயல்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி. இவரது மகன் கோகுல் (வயது 29 )இவர் தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி ( வயது 46) என்பவர் குடிபோதையில் பெருமாள் கோவில் பின்புற பகுதிக்கு வந்து ,அங்கு உட்கார்ந்திருந்த கோகுலிடம் தகராறு செய்தார் . இந்த தகராறில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த துரைசாமி அங்கு கடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து கோகுலின் தலையில் சரமாரியாக தாக்கினார் . இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் கோகுல் இறந்துவிட்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் துரைசாமி,கோகுலிடம் தகராறு செய்து கல்லால் அவரை தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது . இதையடுத்து துரைசாமியை போலீசார் கைது செய்தனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..