கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு – பார் மேனேஜர் கைது..!

கோவை அருகே உள்ள வீரியம் பாளையம் ,காந்தி விதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது 29) டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அவரை சிவராஜ் பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர் . விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பக்கம் உள்ள கரிசல் பட்டியைச் சேர்ந்த ஜான் போஸ்கோ (வயது 43) என்பது தெரிய வந்தது.  இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். பைக்கும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..