பேரூர் டி.எஸ்.பி. திடீர் மரணம்..

கோவை மாவட்டம் ,பேரூர் சப் டிவிஷன்போலீஸ் துணை சூப்பிரான்டாக பணிபுரிந்து வந்தவர் வெற்றி செல்வன். ( வயது 54)இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இவரது உடல் சூலூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது உடலுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்..