ஸ்கூட்டர் ஓட்டி சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை அருகே உள்ள ஆலந்துறை, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கணேசன்.இவரது மனைவி சுபஸ்ரீ .இவர் ஆர். எஸ் .புரத்தில் “வீ கேர் ” கிளினிக் நடத்தி வருகிறார்.நேற்று இரவு வேலை முடிந்து இரவு 8 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் ஆலந்துறையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தென்கரை ,அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 2 இளைஞர்கள் அவர் அணிந்திருந்த செயினை பறித்தனர். இதில் சுபஸ்ரீ கீழே விழுந்தார்.இவர் கீழே விழுந்ததால் , செயினும் கீழே விழுந்து விட்டது .இவர் விழுந்ததைப் பார்த்த இரு வாலிபர்களும் பைக்கில் தப்பி ஓடி விட்டார்கள்.இதுகுறித்து பேரூர் போலீசில் சுபஸ்ரீ புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.