புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாஜக வரவேற்கும் – அண்ணாமலை பேட்டி.!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார்.

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணாமலையிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாரதிய ஜனதா கட்சி வரவேற்க்கும், விஜய் அவர்களின் அறிவிப்பு பிறகு கூட எனது சமூக வலைதளத்தில் பதிவு போட்டுள்ளேன், ஒரு நோக்கத்துடன் வந்துள்ளார்கள், வரட்டும், மக்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் இருக்க வேண்டும், ஒவ்வொரு கட்சியும் தனது கொள்கையை முடிவு செய்த பின்னர், மக்கள் அவர்களை முடிவு செய்வார்கள்.