தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்காமல் பருவமழை பெய்து அணைகள் நிரம்பும் போது வெளியேறும் உபரிநீரை அதிகளவு ...

டெல்லி : சமூக வலைதளங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் வழங்கும் தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனி அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு கமிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுவது ...

நாட்டின் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவருவதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அதிரடியாக அறிவித்தார். உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை, பெட்ரோல்,டீசல் விலை இன்னும் குறையாததையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மேலும் 50 புள்ளிகள் வரை வட்டி உயர்ந்துள்ளது. இதனால், தற்போது கடனுக்கான ரெப்போ ரேட் ...

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் எண்ணிலடங்கா பக்தர்கள் மாலை அணிந்து இருமுடியும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 14 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை ...

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலூ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தலைமையேற்று பேசிய எ.வ.வேலு செய்தியாளர்களை ...

புதுடில்லி: நபிகளை அவமதித்தால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பா.ஜ.,வின் நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் ஆகியோர் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியுள்ளனர். இதற்கு பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து ...

சென்னை : ”ஆவினில் நெய் வாங்குவது போல, ஹெல்த் மிக்ஸ் வாங்குவோம். நாளைக்கே தயாரித்து தந்தால் கூட வாங்க தயாராக இருக்கிறோம்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். ஆவின் நிறுவனம் வாயிலாக, ‘ஹெல்த் மிக்ஸ்’ தயாரிக்கப்பட்டு, வெளியிடுவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. கர்ப்பிணியருக்கு வாங்கி வழங்குவது தொடர்பாக, மூன்று முறை ஆவின் ...

2024 ஆம் வருடம் முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர் களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வெவ்வேறு விதமான சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கின்றது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் செல்போன், டேப்கள், ...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள தமிழக அரசு, ...

பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெங்களூர் நகரில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தினசரி பரிசோதனையை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா ...