இந்திய அரசியலமைப்பின் பொருள் தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவதாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், ...

குஜராத்தில் ஏபிஜி எனும் கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.23 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தது என்பது 2013ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், பிரதமர் மோடி ஆட்சியில் இல்லை என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு லிமிட். இந்தியாவிலேயே கப்பல் கட்டும் நிறுவனங்களில் ...

இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்று தன்னை வர்ணிக்கும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். இனி துருக்கி (Turkey) இல்லை, அதை துர்க்கியே (Turkiye) என்று அழைக்கப்படும் என துருக்கி அதிபர் அறிவித்தார். அதாவது, இப்போது துருக்கிக்கு பதிலாக துருக்கியே என்ற பெயர் தான் அனைத்து வகையான வணிகம், சர்வதேச ...

இளைஞரை கொலை செய்து தலையைத் தூக்கிச் சென்ற மர்ம கும்பலால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள தனியார் எம்பிராய்டரிங் நிறுவனத்தில் இருநாள்களுக்கு முன்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் கே.புதூர், மூன்று மாவடி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலியில் ...

கோவை: கோவையை கலவர பூமியாக்க திமுகவினர் முயற்சிப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். கோவை மாநகர், கோவைப்புதூரில் திமுக பிரமுகர்கள் வாகனத்தை சிறைபிடித்த, அதிமுக செய்தித் தொடர்பாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிமுகவினர் 10 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குனியமுத்தூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதைக் கண்டித்து, அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் ...

சென்னை: மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலையை கருதி சிறப்பு நேர்வாக ரூ.3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ...

2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது சிரோன்மணி என்று வர்ணிக்கப்படும் ஒரு ‘மர்ம யோகி’யின் அறிவுரையை ஏற்றே தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார் ...

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முதல்வராக மம்தா செயல்பட்டு வருகிறார். இவருக்கும் மேற்கு வாங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதிவேற்ற நிகழ்ச்சியிலேயே ஆளுநரின் சில கருத்துக்கள் இவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் பலவித ...

குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ...