கோவை தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு இன்று காலையில் இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் பள்ளிக்கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது . இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாயுடன் சென்று பள்ளிக்கூடம் முழுவதும் சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மாணவர்கள் வகுப்பறையிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..